“குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நவீனம் இதுதான்” என்கிறார் கு.ப.ரா. ஆர், ஷண்முகசுந்தரத்தின் முதல் நாவலும் இதுதான்.
நாகம்மாள் ஒரு இலட்சியக் கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்படுகிறாள். சுய பிரக்ஞையுடன் முடிவெடுக்கும் ஒரு புருசியின் கதைதான் நாகம்மாள். தனக்கென்ற உடைமைகளின் மீதான உரிமைக்கான குரலாக நாகம்மாள் தொனிக்கவிடப்படுகிறாள். கதைக் கட்டமைப்பும்சரி, கதாபாத்திரங்களும்சரி இயல்பான நிலையில் நகர்கின்றன. நாகம்மாள் ஆசிரியரால் வலிந்து உருவாக்கப்பட்ட பாத்திரமாக இல்லை. அவள் இயல்பாக வாசகனுடன் ஊடாடுகிறாள். நம் கண் முன்னே உயிர்ப்புடன் திரிகிறாள். பக்கத்து வீட்டு சரசன்ரியின் கதையைக் கூறுவதுபோல நாகம்மாளின் கதையைக் கூறமுடியும். அவ்வளவிற்கு நெருக்கமான, ரசிக்கக்கூடிய கதாபாத்திரமாக நாகம்மாள் இயங்குகிறாள்.
Continue reading “நாகம்மாள் : ஆர். ஷண்முகசுந்தரம்”